1 கொரிந்தியர் 12:19-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

19. அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே?

20. அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே.

21. கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது.

22. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.

23. மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்;

1 கொரிந்தியர் 12